Monday 6 June 2011

"Then drop "I" and "want"! "


ஸ்ரீ ரமண மஹரிஷி ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வாழ்ந்ததால் அவரது பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும் உண்டு. எனவே அவரால் ஆங்கிலம் புரிந்து கொள்ளவும் சிறிது பேசவும் முடியும்.

ஒரு முறை ஓர் ஆங்கிலேய கனவான் ஸ்ரீரமணரிடம் வந்தார்.அந்த ஆங்கிலேயர் சற்றே பரபரப்பாகக் காணப்பட்டார்.ஸ்ரீ ரமணர் அவரைப் பார்த்து ஆங்கிலத்தில்,

"What do you want?" என்று கேட்டார்.

அந்த ஆங்கில கனவான்,"I want peace" என்று மறு மொழி சொன்னார்.

"Then drop "I" and "want"! "  என்றார் மஹரிஷி.

அந்த கனவான் சொன்ன மூன்று சொற்களில் முதல் இரண்டை விலக்கிவிட்டால் மீதமுள்ளது அமைதிதானே! நான் என்ற அகங்காரத்தையும், பார்த்த பொருட்களையெல்லாம் அடைய ஆசைப்படுதலும் தான் அமைதி
இன்மைக்குக் காரணம்.  அந்த இரண்டையும் தியாகம் செய்துவிட்டால் அமைதி தானகக்கிட்டும் என்பதை இரத்தினச் சுருக்கமாகக் கூறினார் மஹரிஷி!
‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================================
பி கு: நானும் என்னவரும் இலண்டன் செல்ல இருப்பதால், அந்நாட்டு நுழைவு அனுமதி= விசா= போன்றவற்றிற்காக அலைந்து கொண்டுள்ளோம்.எனவே பதிவு இடுவதில் தாமதம் பொறுத்தருள்க.


3 comments:

  1. வலைப்பூ ஆசிரியருக்கு வணக்கம்,

    ஒருவரது வார்த்தையை வைத்தே அவர்களுக்கு வழி காட்ட முடியும் என்பதை ரமணர் செய்து காட்டி இருக்கிறார்.

    இதே போல் இன்னொரு நிகழ்ச்சி.ஒரு நாத்திகர் "GOD NO WHERE" என்று எழுதினாராம்.அதைப் பார்த்த ஆத்திகர் அது அப்படி அல்ல என்று சொல்லிவிட்டு கடைசிச் சொல்லின் முதல் எழுத்தை இரண்டாம் சொல்லோடு சேர்த்து "GOD NOW HERE" என்று எழுதினாராம்.

    நன்றி.

    ReplyDelete
  2. அருமை..

    ஒரு விசயத்தை சொல்ல பல பக்கங்கள் தேவையில்லை.. ஒரு வார்த்தையே போதும் என்பதை ஆணித்தரமாக விளக்கியிருக்கிறது தங்களது ஆக்கம்.

    வாழ்த்துக்கள்..

    "What do you want?"

    "I want peace"

    "Then drop "I" and "want"!

    எவ்வளவு அழகாக ரமண மகரிஷி சொல்லியிருக்கிறார்.. அதை தாங்கள் தொகுத்திருக்கிறீர்கள்..

    உண்மையில் அற்புதம்..
    நன்றி.

    பின் ஊட்டத்தில் சிவ. கங்காதரன் வேறு இன்னொரு அருமையான செய்தியை குறித்திருக்கிறார்.. நன்று

    ReplyDelete
  3. வணக்கம் மாமி + கிருஷ்ணன் ஐயா,

    தங்களுடைய இலண்டன் பயணம் எல்லாவகையிலும்
    இனிதாக அமைய எல்லாம்வல்ல சிவபரம்பொருளை சிந்தித்து வாழ்த்துகிறேன்.

    அங்கிருந்தும் இந்த அடியவனை நினைவு கூர்வீர்களாக..

    நன்றிகளும் + வாழ்த்துக்களும்..
    சிவயசிவ

    ReplyDelete